கோவையில் கைதிகள் நடத்தும் ரூ.2 கோடி மதிப்பிலான பெட்ரோல் பங்க் : முதல்வர் தொடங்கி வைத்தார்

கோவை : கோவை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளின் மறுவாழ்வை மையப்படுத்தி 24 மணி நேரமும் இயங்கக்கூடிய பெட்ரோல் பங்கினை தமிழக முதல்வர் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.


கோவை : கோவை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளின் மறுவாழ்வை மையப்படுத்தி 24 மணி நேரமும் இயங்கக்கூடிய பெட்ரோல் பங்கினை தமிழக முதல்வர் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். 

சிறைச்சாலை என்பது சிறையிலுள்ள குற்றவாளிகளை சீர்திருத்தும் இடமாக இருக்க வேண்டும். சிறையில் இருப்பவர்கள் மறுவாழ்வு மற்றும் விடுதலைக்கு பின் அவர்கள் சமுதாயத்தில் நல்லதொரு வாழ்க்கையை நடத்த தேவையான ஏற்பாடுகளையும் சிறைத்துறை செய்து தரவேண்டும். இந்த அடிப்படையில், சிறைவாசிகளுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகளை சிறைத்துறை நிர்வாகம் அளித்து வருகிறது. 



இந்நிலையில், ஏற்கனவே, கோவை மத்திய சிறை மைதானத்தில் சிறை சந்தை அமைத்து சிறைவாசிகளுக்குத் தேவையான வேலை வாய்ப்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறை சந்தையை விரிவுபடுத்தும் விதமாக மத்திய சிறைகளில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தை அமைத்திட முயற்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கோவை, வேலூர், பாளையங்கோட்டை போன்ற மத்திய சிறைகளில், பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து நிறுவிட தமிழக அரசு ஆணையிட்டது. 

இதையடுத்து, இன்று டாக்டர் நஞ்சப்பா சாலையில் மத்திய பேருந்து நிலையம் எதிரே ரூ.2 கோடி மதிப்பிலான பெட்ரோல் பங்கினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்துள்ளார். இந்த விற்பனை நிலையம் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது. மேலும், இந்த விற்பனை அனைத்தும் சிறை கைதிகள் மூலமாகவே நடைபெற உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனங்களுக்கு ஆயில் மாற்றி தருதல், இலவசமாகக் காற்று நிரப்புதல் ஆகிய பணிகளும் நடைபெறவுள்ளது. இதன் இரண்டாம் கட்டமாக, மத்திய சிறை நிர்வாகம் சார்பில் மற்றொரு பெட்ரோல் பங்க் தொடங்க உள்ளதாக சிறை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 



மேலும், கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் அறிவுடைநம்பி, சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பொது மேலாளர் சுரேஷ் ஆகியோர் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், சிறை நிர்வாகத்தினர் கைதிகள் என பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...