திருப்பூர் : அமைப்புச்சார தொழிலாளர்களுக்கான உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பத்தினை அதிமுகவினர் பெற்றுக்கொண்டு, அதிமுகவினருக்கு மட்டுமே வழங்கி வருவதாகத் திருப்பூரில் எதிர்கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : அமைப்புச்சார தொழிலாளர்களுக்கான உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பத்தினை அதிமுகவினர் பெற்றுக்கொண்டு, அதிமுகவினருக்கு மட்டுமே வழங்கி வருவதாகத் திருப்பூரில் எதிர்கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு ரூ.2000 வழங்குவதாக அறிவித்தது. இத்தொகை வரும் 24ம் தேதி முதல் வழங்கப்படவுள்ள நிலையில், அந்தந்த மாநகராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சியில் அதற்கான விண்ணப்பங்களை ஒட்டு மொத்தமாகப் பெற்றுக்கொண்ட அதிமுகவினர், அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கி வருவதாகத் தெரிகிறது. ஆகையால், இதனைப் பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்கவேண்டும் எனக் கோரி திமுக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாநகராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன் பின்னர், அனைத்து கட்சியினரும் கலைந்து சென்றனர்.

தமிழகம் முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு ரூ.2000 வழங்குவதாக அறிவித்தது. இத்தொகை வரும் 24ம் தேதி முதல் வழங்கப்படவுள்ள நிலையில், அந்தந்த மாநகராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சியில் அதற்கான விண்ணப்பங்களை ஒட்டு மொத்தமாகப் பெற்றுக்கொண்ட அதிமுகவினர், அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கி வருவதாகத் தெரிகிறது. ஆகையால், இதனைப் பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்கவேண்டும் எனக் கோரி திமுக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாநகராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன் பின்னர், அனைத்து கட்சியினரும் கலைந்து சென்றனர்.