இந்த ஆண்டு 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதி

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசு எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசு எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது ;- தமிழகத்தில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. மின்துறை அமைச்சர் தங்கமணியின் சிறப்பான செயல்பாட்டால், மின்மிகை மாநிலமாகத் தமிழகம் உருவாக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து துறை ரீதியாகத் தயார் ஆகிவருகின்றனர். ஆனால், அரசாணை பிறப்பிப்பது பற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும். அது குறித்து அரசு எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை. ஆணை பிறப்பித்தால் மட்டுமே இது நடைமுறைக்கு வரும். அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும், இவ்வாறு அவர் பேசினார். 



ஏற்கனவே, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் நிலையில், 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தினால், அவர்களை உளவியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பரவும் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி அளிக்கும் வகையில், அமைச்சா் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...