சிறப்பு மலைரயில் சேவை ஊட்டி வரை நீட்டிக்கப்படும் - சேலம் கோட்ட ரயில்வே மேலாளர்

கோவை : கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டு வரும் கூடுதல் சிறப்பு மலைரயில் சேவை ஊட்டி வரை நீட்டிக்கப்படவுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டு வரும் கூடுதல் சிறப்பு மலைரயில் சேவை ஊட்டி வரை நீட்டிக்கப்படவுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டு பழமை வாய்ந்த மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நடைமேடை விரிவாக்க பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதனை ஆய்வு செய்யவும் மலைரயில் இயக்கம் மற்றும் இதன் பணிமனையிணை பார்வையிடவும் இன்று மாலை சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுப்பாராவ் இன்று வருகை தந்தார். 

மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் வந்த கோட்ட மேலாளர் ரயில் நிலையத்தை ஆய்வு செய்து பயணிகளின் வசதிக்காக செய்யபட்டிருந்த பணிகளை பார்வையிட்டார். பின்னர் மலைரயில் பணிமனையினைக்கு சென்றதோடு ரயில்நிலைய அதிகாரிகளோடு இனி வரும் காலங்களில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு தேவைப்படும் வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ், “சுற்றுலா தளமான நீலகிரிக்கு செல்லும் நுழைவு வாயிலாக உள்ள மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் முக்கியத்துவம் வாய்ந்தது. உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரும் இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைக்களை எடுத்து வருகிறது. 

இந்த ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன குளியல் கழிவறைகள் மற்றும் டீலக்ஸ் அறைகள் அமைக்கப்படவுள்ளது. தற்போது தினசரி மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு ஊட்டிக்கு மலைரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் வாரம்தோறும் சனிக்கிழமை நாட்களில் கூடுதலாக மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை சிறப்பு மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. 

இதனை ஊட்டி வரை இயக்கவேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையினை ஏற்று விரைவில் சிறப்பு மலைரயில் சேவை ஊட்டி வரை நீட்டிக்கப்படும். மேலும் மலைரயிலில் செல்லும் பயணிகளுக்கு உணவு வழங்கும் கேட்டரிங் வசதி செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...