சூழலியல் செயற்பாட்டாளர் முகிலனை மீட்கக் கோரி கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை : சூழலியல் செயற்பாட்டாளர் முகிலனை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : சூழலியல் செயற்பாட்டாளர் முகிலனை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சூழலியல் செயற்பாட்டாளர் முகிலனை கடந்த சில நாட்களாக காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, முகிலனை மீட்டு தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், முகிலனை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில், சமூகநீதி வழக்கறிஞர்கள் மையம், மக்கள் சிவில் உரிமை கழகம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்த ஆவணப்படம் வெளியிட்ட பின்னர், முகிலனை காணவில்லை எனவும், முகிலன் கடத்தப்பட்டாரா..? அல்லது கைது செய்யப்பட்டாரா..? என தெரியவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். 

மேலும், முகிலனை மீட்பதில் காவல்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாகவும், அவரை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...