கோவை : சூழலியல் செயற்பாட்டாளர் முகிலனை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை : சூழலியல் செயற்பாட்டாளர் முகிலனை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சூழலியல் செயற்பாட்டாளர் முகிலனை கடந்த சில நாட்களாக காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, முகிலனை மீட்டு தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முகிலனை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சமூகநீதி வழக்கறிஞர்கள் மையம், மக்கள் சிவில் உரிமை கழகம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்த ஆவணப்படம் வெளியிட்ட பின்னர், முகிலனை காணவில்லை எனவும், முகிலன் கடத்தப்பட்டாரா..? அல்லது கைது செய்யப்பட்டாரா..? என தெரியவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், முகிலனை மீட்பதில் காவல்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாகவும், அவரை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
சூழலியல் செயற்பாட்டாளர் முகிலனை கடந்த சில நாட்களாக காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, முகிலனை மீட்டு தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முகிலனை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சமூகநீதி வழக்கறிஞர்கள் மையம், மக்கள் சிவில் உரிமை கழகம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்த ஆவணப்படம் வெளியிட்ட பின்னர், முகிலனை காணவில்லை எனவும், முகிலன் கடத்தப்பட்டாரா..? அல்லது கைது செய்யப்பட்டாரா..? என தெரியவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், முகிலனை மீட்பதில் காவல்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாகவும், அவரை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.