தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு

வரும் மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


வரும் மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி அமைக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆளும் கட்சியான அ.தி.மு.க, நேற்று பா.ம.க மற்றும் பா.ஜ.க.,வுடனான கூட்டணியை உறுதி செய்ததுடன், தொகுதி பங்கீட்டையும் உறுதி செய்தது. மேலும், தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

மறுபுறம், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருந்தாலும், தொகுதி பங்கீடு இன்னமும் உறுதி செய்யப்படாமலேயே இருந்து வந்தது. இதனிடையே, டெல்லியில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதன்பிறகு, ராகுல் காந்தியுடன், கனிமொழியும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு பிறகு, இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், வேணுகோபால் சென்னை வந்தடைந்தனர். அவர்களை, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி மற்றும் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

பின்னர், தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.,வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக, முகுல்வாஸ்னிக், சென்னை கிண்டியிலுள்ள தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, அண்ணா அறிவாலயம் சென்று மு.க.ஸ்டாலினுடன் முகுல்வாஸ்னிக் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகியது. மேலும், 25 இடங்களில் தி.மு.க. போட்டியிடுகிறது. 

இதைத்தொடர்ந்து, அண்ணா அறிவாலயம் சென்று மு.க.ஸ்டாலினுடன் முகுல்வாஸ்னிக் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு, தமிழகத்தில் 9 தொகுதியும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என மொத்தம் 10 இடங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகியது. 

பின்னர், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்கின் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு, மற்ற கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என முடிவு செய்யப்படும் என்றும், கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கப்பட்டது போக எஞ்சிய தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடும் என ஸ்டாலின் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...