கொடிசியா அருகே அசுர வேகத்தில் வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து : அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சி

கோவை : பீளமேடு அருகே உள்ள கொடிசியாவில் அதிவேகமாக கார் ஒன்று, சாலையோரத்தில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை மோதச் செய்த அதிர்ச்சி சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : பீளமேடு அருகே உள்ள கொடிசியாவில் அதிவேகமாக கார் ஒன்று, சாலையோரத்தில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை மோதச் செய்த அதிர்ச்சி சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீளமேடு அருகே கொடிசியா தொழிற்காட்சியகம் உள்ளது. இந்த கொடிசியா தொழிற்காட்சியகம் சாலையை சுற்றி மொத்தம் 4-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும், 5 கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல, நீண்ட சாலையான இந்த சாலையில், கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனங்களையும், கார்களையும் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக ஓட்டி வருகின்றனர். இதனால், இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. 

குறிப்பாக, காலை மற்றும் மாலை என இருநேரங்களில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருப்பதால், இந்த கொடிசியா வளாகத்தின் முன்பகுதியில் உள்ள மூன்று வளைவு சாலையில் தினமும் இரண்டுக்கு மேற்பட்ட விபத்துகள் ஏற்படுகின்றன. அதேபோல, ஜென்னி கிளப் சாலை துவக்கப்பட்ட இடத்திலிருந்து கொடிசியா வரை இறக்கமான பகுதி என்பதால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன.

இந்த நிலையில், இன்று மாலை 4.42 மணியளவில் TN 38 AJ 1383 என்ற சொகுசு காரும், மற்றொரு சொகுசு காரும் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஜென்னி கிளப் பகுதியில் இருந்து கொடிசியா தொழிற்காட்சி வளாகம் சாலை வழியாக அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது, இஸ்கான் கோவில் சாலையிலிருந்து ஜென்னி கிளப் பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் வாகனத்தை வளைத்துள்ளார். 



அப்போது, விதியை மீறி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், சீறிப் பாய்ந்து வந்த சொகுசு கார், இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மேலே தூக்கி வீசப்பட்டார். பின்னர், அந்த கார், விபத்து நடந்த இடத்தில் நிறுத்தாமல், மீண்டும் அதிவேகமாக அங்கிருந்து சென்றது. இதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், அதிவேகமாக சென்ற காரை துரத்திப் பிடிக்க முற்பட்டனர். ஆனால், அதற்குள் கார் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து சென்று விட்டது. 

பின்னர், தகவலறிந்து வந்த பீளமேடு போக்குவரத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் கண்டிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகளாகத் தான் இருக்கும் என இப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய காரில் பிளேக் டிண்ட் ஒட்டப்பட்டிருந்ததால், காரை ஓட்டி வந்தது ஆணா..? பெண்ணா..? என்பதும் தெரியவில்லை.

இந்த சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், விபத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டிய நபர்களை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...