கோவை : உடுமலைப் பகுதியில் இருந்து மீண்டும் பிடித்துச் செல்லப்பட்ட சின்னத்தம்பியை பெரிய அளவிலான கூண்டிற்கு வனத்துறையினர் மாற்றம் செய்துள்ளனர்.
கோவை : உடுமலைப் பகுதியில் இருந்து மீண்டும் பிடித்துச் செல்லப்பட்ட சின்னத்தம்பியை பெரிய அளவிலான கூண்டிற்கு வனத்துறையினர் மாற்றம் செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களாகவே மடத்துக்குளம், கண்ணாடிப்புத்தூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் தஞ்சமடைந்த சின்னதம்பியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர், சின்னதம்பியை லாரியில் ஏற்றி ஆனைமலை புலிகள் காப்பக வரகளியாறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர், கலீம் மற்றும் 2 பெண் யானைகள் உதவியுடன் கூண்டுக்குள் அடைக்க 30 நிமிடம் போராட்டம் நடந்தது. கூண்டுக்குள் நுழைந்ததுமே, சின்னதம்பி அமைதியாக மாறிவிட்டான்.
இந்தக் கூண்டானது, சின்னத்தம்பியின் உடலுக்கு சரியான அளவில் இருந்ததால், சுதந்திரமாக நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலையில் இருந்தது. இருப்பினும், கால்நடை மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சின்னதம்பி வைக்கப்பட்டான்.
வலிநிவாரணி, ஊட்டச்சத்து ஊசிகளை செலுத்தினர். சின்னதம்பி இருக்கும் பகுதிக்கு வேறு காட்டு யானைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக 5 யானைகள் கூடவே பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்கின்றன.
அதேபோல, சின்னதம்பிக்கு உணவளிக்கவும், கவனித்து கொள்ளவும் பாகன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வேளை சோளம், பசுந்தீவனம், கரும்பு, தென்னை ஓலைகள் உள்ளிட்ட சாப்பாடு கொடுக்கப்படுகிறது.
பொதுவாக, சிறைபிடிக்கப்படும் காட்டு யானைகள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு, ஒரு மாத பயிற்சிக்கு பின்னரோ அல்லது அதன் மனநிலையை பொறுத்தோ, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆனால், சின்னத்தம்பி விஷயத்தில் இந்த நடவடிக்கை சற்று மாறுபட்டதாகவே காணப்பட்டுள்ளது. அதாவது, வெறும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சின்னத்தம்பியை, சாதாரணமாக வெளியே விட்டுள்ளனர். பின்னர், அவன் சுதந்திரமாக நடமாடும் வகையில் பெரிய அளவிலான கூண்டில் மீண்டும் அடைத்தனர்.
"சின்னத்தம்பி அமைதியான மனநிலையுடன், மிகவும் ஆரோக்யமாக இருக்கிறான். அவனை இங்குள்ள சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றுவற்காக, 5 யானைகள் எப்போதும் அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சின்னத்தம்பியின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறது," என்கின்றனர் அதிகாரிகள்
2 மாத பயிற்சிக்குள் பாகனை தனது மீது ஏற்றி அமர சின்னத்தம்பி ஒத்துழைக்கும்பட்சத்தில், அதற்கான பயிற்சி நிறைவு பெறும் என வன அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த சில தினங்களாகவே மடத்துக்குளம், கண்ணாடிப்புத்தூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் தஞ்சமடைந்த சின்னதம்பியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர், சின்னதம்பியை லாரியில் ஏற்றி ஆனைமலை புலிகள் காப்பக வரகளியாறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர், கலீம் மற்றும் 2 பெண் யானைகள் உதவியுடன் கூண்டுக்குள் அடைக்க 30 நிமிடம் போராட்டம் நடந்தது. கூண்டுக்குள் நுழைந்ததுமே, சின்னதம்பி அமைதியாக மாறிவிட்டான்.
இந்தக் கூண்டானது, சின்னத்தம்பியின் உடலுக்கு சரியான அளவில் இருந்ததால், சுதந்திரமாக நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலையில் இருந்தது. இருப்பினும், கால்நடை மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சின்னதம்பி வைக்கப்பட்டான்.
வலிநிவாரணி, ஊட்டச்சத்து ஊசிகளை செலுத்தினர். சின்னதம்பி இருக்கும் பகுதிக்கு வேறு காட்டு யானைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக 5 யானைகள் கூடவே பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்கின்றன.
அதேபோல, சின்னதம்பிக்கு உணவளிக்கவும், கவனித்து கொள்ளவும் பாகன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வேளை சோளம், பசுந்தீவனம், கரும்பு, தென்னை ஓலைகள் உள்ளிட்ட சாப்பாடு கொடுக்கப்படுகிறது.
பொதுவாக, சிறைபிடிக்கப்படும் காட்டு யானைகள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு, ஒரு மாத பயிற்சிக்கு பின்னரோ அல்லது அதன் மனநிலையை பொறுத்தோ, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆனால், சின்னத்தம்பி விஷயத்தில் இந்த நடவடிக்கை சற்று மாறுபட்டதாகவே காணப்பட்டுள்ளது. அதாவது, வெறும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சின்னத்தம்பியை, சாதாரணமாக வெளியே விட்டுள்ளனர். பின்னர், அவன் சுதந்திரமாக நடமாடும் வகையில் பெரிய அளவிலான கூண்டில் மீண்டும் அடைத்தனர்.
"சின்னத்தம்பி அமைதியான மனநிலையுடன், மிகவும் ஆரோக்யமாக இருக்கிறான். அவனை இங்குள்ள சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றுவற்காக, 5 யானைகள் எப்போதும் அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சின்னத்தம்பியின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறது," என்கின்றனர் அதிகாரிகள்
2 மாத பயிற்சிக்குள் பாகனை தனது மீது ஏற்றி அமர சின்னத்தம்பி ஒத்துழைக்கும்பட்சத்தில், அதற்கான பயிற்சி நிறைவு பெறும் என வன அதிகாரிகள் கூறுகின்றனர்.