நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மனோஜ் சாமி இன்று காலை உதகை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மனோஜ் சாமி இன்று காலை உதகை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மனோஜ் சாமிக்கு இம்மாதம் 18ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில், மாவட்ட நீதிபதி வடமலை முன்பு இன்று சரணடைந்தார்.

இதையடுத்து, நீதிபதி வடமலை விசாரணையை இன்று மதியத்திற்கு ஒத்தி வைத்தார். மேலும், மாலையில் வழக்கு விசாரணையை மேற்கொண்டு, மனோஜ் சாமியை வரும் மார்ச் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, மனோஜ் சாமி கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதனிடையே, தலை மறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான சயான், வாளையார் மனோஜ் ஆகியோரை வரும் பிப்ரவரி 25ம் தேதி வரை கைது செய்யக் கூடாதென்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், கோத்தகிரி காவல் துறைக்கு இன்று உத்தரவிட்டார்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மனோஜ் சாமிக்கு இம்மாதம் 18ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில், மாவட்ட நீதிபதி வடமலை முன்பு இன்று சரணடைந்தார்.

இதையடுத்து, நீதிபதி வடமலை விசாரணையை இன்று மதியத்திற்கு ஒத்தி வைத்தார். மேலும், மாலையில் வழக்கு விசாரணையை மேற்கொண்டு, மனோஜ் சாமியை வரும் மார்ச் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, மனோஜ் சாமி கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதனிடையே, தலை மறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான சயான், வாளையார் மனோஜ் ஆகியோரை வரும் பிப்ரவரி 25ம் தேதி வரை கைது செய்யக் கூடாதென்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், கோத்தகிரி காவல் துறைக்கு இன்று உத்தரவிட்டார்.