திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து ஏராளமான பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து ஏராளமான பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 38-வது வார்டுக்குட்பட்ட பி.ஏ.பி நகர், கார்த்திக் நகர், முத்தனம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், மாதம் 3 முறை குடிநீர் விநியோகம் செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், வருடந்தோறும் வரி மட்டும் வசூலிக்கும் மாநகராட்சி அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என குற்றம்சாட்டிய அப்பகுதி பெண்கள், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் முத்தனம்பாளையம் - நல்லூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தை, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 38-வது வார்டுக்குட்பட்ட பி.ஏ.பி நகர், கார்த்திக் நகர், முத்தனம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், மாதம் 3 முறை குடிநீர் விநியோகம் செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், வருடந்தோறும் வரி மட்டும் வசூலிக்கும் மாநகராட்சி அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என குற்றம்சாட்டிய அப்பகுதி பெண்கள், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் முத்தனம்பாளையம் - நல்லூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தை, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.