உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கோவை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக அஞ்சலி

கோவை : காஷ்மீர் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு, கோவையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக அஞ்சலி செலுத்திய பின், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : காஷ்மீர் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு, கோவையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக அஞ்சலி செலுத்திய பின், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடி பொருள்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோத செய்து, பயங்கரவாதிகள்  நிகழ்த்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உள்பட 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பல்வேறு அமைப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி மற்றும் கண்டன முழக்கம் கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக நடைபெற்றது. 



இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கோவை மண்டலத்தலைவர் சூலூர் சந்திரசேகரன் தலைமை ஏற்றார். கோவை மாவட்ட வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் இருதயராஜ், வஹாப், கணேசன் மற்றும் சௌந்தர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்நிகழ்ச்சியில், கோவையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வணிகர்கள் கையில் பதாகைகளுடன் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த பயங்கரவாத அமைப்புகளை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பினர். 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...