கோவை : வருவாய் ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து 26 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்த, கொள்ளையர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கோவை : வருவாய் ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து 26 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்த, கொள்ளையர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம், வெள்ளலூர் எல் ஜி நகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் நிர்மல்குமார். இவர் தெற்கு தாலுக்கா அலுவலகத்தில் சிவில் சப்ளை துறையில், வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 17ம் தேதி குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர், நேற்று இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதையடுத்து, கதவை திறந்து பார்க்கும் போது, வீடு முழுவதும் பொருட்கள் சிதறியபடி கிடந்துள்ளன. மேலும், பீரோக்கள் உடைக்கப்பட்ட நிலையிலும் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், போத்தனூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

இந்த சம்பவத்தில், பீரோக்களில் இ௫ந்த 26 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50,000 ரொக்கம் ஆகியவை தி௫டப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் தடயவியல் ஆய்வுகள் மூலம் குற்றவாளிகளின் கைரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும், கொள்ளையர்கள் வீட்டின் பக்கவாட்டு கதவின் தாளை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டதை உறுதி செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, போலீசார் சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மூலம் கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம், வெள்ளலூர் எல் ஜி நகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் நிர்மல்குமார். இவர் தெற்கு தாலுக்கா அலுவலகத்தில் சிவில் சப்ளை துறையில், வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 17ம் தேதி குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர், நேற்று இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதையடுத்து, கதவை திறந்து பார்க்கும் போது, வீடு முழுவதும் பொருட்கள் சிதறியபடி கிடந்துள்ளன. மேலும், பீரோக்கள் உடைக்கப்பட்ட நிலையிலும் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், போத்தனூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

இந்த சம்பவத்தில், பீரோக்களில் இ௫ந்த 26 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50,000 ரொக்கம் ஆகியவை தி௫டப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் தடயவியல் ஆய்வுகள் மூலம் குற்றவாளிகளின் கைரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும், கொள்ளையர்கள் வீட்டின் பக்கவாட்டு கதவின் தாளை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டதை உறுதி செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, போலீசார் சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மூலம் கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.