திருப்பூர் : திருமுருகன்பூண்டியில் உள்ள பழமை வாய்ந்த திருமுருகநாதசுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசம் முழங்க பக்திப்பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருப்பூர் : திருமுருகன்பூண்டியில் உள்ள பழமை வாய்ந்த திருமுருகநாதசுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசம் முழங்க பக்திப்பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருப்பூரை அடுத்துள்ள திருமுருகன்பூண்டியில் பழமை வாய்ந்ததும், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுமான திருமுருகநாதசுவாமி கோயிலில் கடந்த 12ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கிய தேர்த்திருவிழா வருகின்ற 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவில் கடந்த 13ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி மாலை நடைபெற்றது. இதில் திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோசம் முழங்க திருத்தேரை வடம்பிடித்து திருவீதிகள் வழியாக இழுத்து வந்தனர். தொடர்ந்து நாளையும் திருத்தேர் வடம்பிடித்து திருவீதிகள் வழியாக உலாவந்து தேர் நிலையை அடையவுள்ளது.

திருப்பூரை அடுத்துள்ள திருமுருகன்பூண்டியில் பழமை வாய்ந்ததும், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுமான திருமுருகநாதசுவாமி கோயிலில் கடந்த 12ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கிய தேர்த்திருவிழா வருகின்ற 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவில் கடந்த 13ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி மாலை நடைபெற்றது. இதில் திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோசம் முழங்க திருத்தேரை வடம்பிடித்து திருவீதிகள் வழியாக இழுத்து வந்தனர். தொடர்ந்து நாளையும் திருத்தேர் வடம்பிடித்து திருவீதிகள் வழியாக உலாவந்து தேர் நிலையை அடையவுள்ளது.