அ.தி.மு.க., பா.ம.க., கூட்டணி ஏற்கனவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி : ஸ்டாலின் பாய்ச்சல்

நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடும் அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி ஏற்கனவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடும் அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி ஏற்கனவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், இன்று ஆளும். அ.தி.மு.க., தலைமையில் பா.ம.க., பா.ஜ.க., கூட்டணி அமைத்து போடுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக, இந்த 3 கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் சென்னையில் சந்தித்து கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 

இந்த நிலையில், இந்த கூட்டணி குறித்து நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:- 2009 தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ம.க., படுதோல்வியை சந்தித்தது. வரும் தேர்தலில் இந்த நிலை தான் ஏற்படும். அ.தி.மு.க., பா.ம.க., கூட்டணி ஏற்கனவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி. 

அ.தி.மு.க., ஆட்சியை விமர்சித்து புத்தகம் வெளியிட்டவர் ராமதாஸ். அ.தி.மு.க., குறித்தும் பா.ம.க., எந்த அளவிற்கு விமர்சனம் செய்தது என்பது அனைவருக்கும் தெரியும். 7 மக்களவை தொகுதி மற்றும் ராஜ்யசபா சீட்டுக்கு பின்னால், ஏதோ ஒன்று உள்ளது. நாட்டை பற்றியும், மக்களை பற்றியும் ராமதாசுக்கு கவலை இல்லை, இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...