நீலகிரி : கூடலூரையடுத்த பந்தலூரில் வீட்டிற்குள் காயங்களுடன் புகுந்த சிறுத்தையை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.
நீலகிரி : கூடலூரையடுத்த பந்தலூரில் வீட்டிற்குள் காயங்களுடன் புகுந்த சிறுத்தையை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டிற்குள் கடந்த 5-ம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. இதையறிந்த வீட்டின் உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையை கூண்டு வைத்து பாதுகாப்பாக பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தையின் முதுகு மற்றும் கால் பகுதிகளில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வன அலுவலர் ராகுல் உத்தரவுபடி, கால்நடை மருத்துவ குழுவினர், சிறுத்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தினசரி 3 நேரம் வனச்சரகர் மனோகரன் மேற்பார்வையில், மருத்துவர்கள் பரத்ஜோதி, நந்தினி ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சையளித்தனர். இதனால், காயங்கள் படிப்படியாக குணம் அடைந்து வந்த நிலையில், சிறுத்தையை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர். அதன்படி, சிறுத்தை இன்று லாரியில் கொண்டு செல்லப்பட்டது.
இது தொடர்பாக கூடலூர் வன அலுவலர் ராகுல் கூறுகையில், ''பிடிக்கப்பட்ட சிறுத்தையின் காயத்திற்கு, தினசரி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனை வனப்பகுதியில் விடுவிப்பதற்கு பதில், வண்டலூர் மிருகக் காட்சி சாலைக்கு கொண்டு செல்ல உயரதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். இந்த நிலையில், இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது,” என்றார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டிற்குள் கடந்த 5-ம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. இதையறிந்த வீட்டின் உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையை கூண்டு வைத்து பாதுகாப்பாக பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தையின் முதுகு மற்றும் கால் பகுதிகளில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வன அலுவலர் ராகுல் உத்தரவுபடி, கால்நடை மருத்துவ குழுவினர், சிறுத்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தினசரி 3 நேரம் வனச்சரகர் மனோகரன் மேற்பார்வையில், மருத்துவர்கள் பரத்ஜோதி, நந்தினி ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சையளித்தனர். இதனால், காயங்கள் படிப்படியாக குணம் அடைந்து வந்த நிலையில், சிறுத்தையை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர். அதன்படி, சிறுத்தை இன்று லாரியில் கொண்டு செல்லப்பட்டது.
இது தொடர்பாக கூடலூர் வன அலுவலர் ராகுல் கூறுகையில், ''பிடிக்கப்பட்ட சிறுத்தையின் காயத்திற்கு, தினசரி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனை வனப்பகுதியில் விடுவிப்பதற்கு பதில், வண்டலூர் மிருகக் காட்சி சாலைக்கு கொண்டு செல்ல உயரதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். இந்த நிலையில், இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது,” என்றார்.