ஜென்ம நிலங்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை : நீலகிரி ஆட்சியர் விளக்கம்

நீலகிரி : கூடலூர் ஜென்ம நிலம் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அங்குள்ள மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி : கூடலூர் ஜென்ம நிலம் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அங்குள்ள மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நிரூபர்களிடம் கூறியதாவது:- கூடலுாரில் செக்ஷன்-53 ஆக மாற்றப்பட்ட நிலங்களை வனநிலமாக மாற்றும் வகையில், மாநில சட்டசபையில் '16ஏ' என்ற பெயரில் புதிய வனச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. செக்ஷன்-53 வனநிலம் தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள '16ஏ' வனச் சட்டத்தால், எந்த பாதிப்பும் இல்லை. சிலர் திட்டமிட்டு தனிநபர் பிரச்சினையை பேசி குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி, புதிய ஆக்கிரமிப்புகளை ஏற்க முடியாது. புதிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். தனிப்பட்ட நபர்களை விட இங்குள்ள மக்களின் பாதுகாப்பு முக்கியம். மக்களுக்காக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இச்சட்டம் குறித்து மக்களிடம் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது, இவ்வாறு தெரிவத்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...