Breaking :சூடு பிடித்தது தேர்தல் களம்; அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி அறிவிப்பு..!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் இணைந்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் இணைந்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்டணி அமைக்க ஒவ்வொரு கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணி குறித்து இன்று பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா முறைப்படியான கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்பட்டது. ஆனால், அவரது வருகை திடீர் என ரத்து செய்யப்பட்டது. 

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க., தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று மதியம் தமிழகம் வந்தார். அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் தமழிசை சவுந்தரராஜன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர், பியூஸ் கோயல் தலைமையிலான தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினர். அப்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.,- பா.ஜ.க. இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கூட்டணி குறித்து ஒப்பந்தமும் கையெழுத்தாகியது. இந்தப் பேச்சுவார்த்தையில் பா.ஜ.க.,வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக, பா.ம.க., அ.தி.மு.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...