கோவை : அ.தி.மு.க., பா.ம.க., கூட்டணி ஒரு பொருந்தாத கூட்டணி என கோவை சிங்காநல்லூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ., நா. கார்த்திக் விமர்சித்துள்ளார்.
கோவை : அ.தி.மு.க., பா.ம.க., கூட்டணி ஒரு பொருந்தாத கூட்டணி என கோவை சிங்காநல்லூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ., நா. கார்த்திக் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டிக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி ஒரு பொருந்தாத கூட்டணியாகும். தொடர்ந்து, அ.தி.மு.க., ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சிக்கும் கட்சிகளில் பா.ம.க.,வும் ஒன்று. ஒரு வாரத்திற்கு முன்பு ஊழல் அமைச்சர்களின் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியது பா.ம.க.தான்.
அதுமட்டுமின்றி, சமீபத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய அன்புமனி ராமதாஸ், அ.தி.மு.க.,வின் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ், இவர்கள் இருவரும் எந்த திறமையிமில்லாதவர்கள். பட்ஜெட் பற்றிய அறிவில்லாத அடிமைகள். ஜெயலலிதா எதற்கும் உதவாதவர்களை தான் பொறுப்பில் வைத்திருந்தார். இவர்கள் டயர் நக்கிகள் எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது ஆதாயத்திற்காக அ.தி.மு.க.,வுடன் பா.ம.க. சேர்ந்துள்ளது. மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கூட்டணி இது. நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக இந்த கூட்டணி படுதொல்வி அடையும். தமிழ மக்கள் இவை அனைத்தையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள், எனக் கூறினார்.