கோவை : தேச பாதுகாப்பிற்கு உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் வீரவணக்கம் செலுத்துவது போன்று, தீக்குச்சிகளால் வடிவமைத்த யு.எம்.டி.ராஜாவின் படைப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோவை : தேச பாதுகாப்பிற்கு உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் வீரவணக்கம் செலுத்துவது போன்று, தீக்குச்சிகளால் வடிவமைத்த யு.எம்.டி.ராஜாவின் படைப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி. ராஜா. இவர், அவ்வப்போது பல்வேறு வகையான சிற்பங்களை உருவாக்கி வருகிறார்.
கடந்த காலங்களில் ஹெல்மெட் விழிப்புணர்வு, டெங்கு கொசு விழிப்புணர்வு பட்டாசு, ஹெல்மெட் விநாயகர், மெழுகுகள் கொண்டு தேச தலைவர்கள் உருவம், ஜல்லிகட்டை வரவேற்கும் விதமாக சிறிய தங்கத்தினால் ஆன சிறிய சிற்பம்,1 00 சதவீத வாக்குகள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட ஏராளமான சிற்பங்களை செய்து உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் 44 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தது. மேலும், உயிரிழந்த வீரர்களுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை தங்க நகை தொழிலாளி யு.எம்.டி ராஜா, 44 தீக்குச்சிகளின் மருந்து பகுதியில் இந்திய ராணுவ வீரர்களின் திருவுருவமும், அதனை சுற்றி இந்திய இளைஞர்கள் வெள்ளை தீக்குச்சிகளை பதித்து தேச ஒற்றுமைக்கு நாங்கள் உள்ளோம் என்பதை விளக்கும் விதமாக வடிவமைத்து உள்ளார். அவரது இந்த படைப்பு அனைவரிடத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.