கோவை : ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 40-க்கும் அதிகமான சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும், ரூ.5 லட்சத்தை மாதா அமிர்தானந்த மயி மடம் வழங்கவுள்ளது.
கோவை : ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 40-க்கும் அதிகமான சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும், ரூ.5 லட்சத்தை மாதா அமிர்தானந்த மயி மடம் வழங்கவுள்ளது.
இது குறித்து மாதா அமிர்தானந்தமயி தேவி கூறியதாவது : "நாட்டை பாதுகாக்கின்ற பணியை செய்யும் போது உயிரிழந்திருக்கிற, வீரம் மிக்க ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பது நமது பொறுப்பு.
அவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் நேசத்திற்குரிய நபர்களுக்கும் எனது மனமார்ந்த அனுதாபத்தையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது, மன அமைதிக்காகவும், நலனுக்காகவும் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்," இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
மேலும், அவரின் மடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-ஆம் ஆண்டின் பாரத யாத்ரா சுற்றுப்பயணத்தில், முதல் நிறுத்தமான மைசூரில், மாதா அமிர்தானந்த மயி பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில், நிவாரணம் வழங்குவது குறித்த இந்த அறிவிப்பை மாதா அமிர்தானந்தமயி மடம் வெளியிட்டுள்ளது, எனக் கூறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மாதா அமிர்தானந்தமயி தேவி கூறியதாவது : "நாட்டை பாதுகாக்கின்ற பணியை செய்யும் போது உயிரிழந்திருக்கிற, வீரம் மிக்க ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பது நமது பொறுப்பு.
அவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் நேசத்திற்குரிய நபர்களுக்கும் எனது மனமார்ந்த அனுதாபத்தையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது, மன அமைதிக்காகவும், நலனுக்காகவும் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்," இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
மேலும், அவரின் மடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-ஆம் ஆண்டின் பாரத யாத்ரா சுற்றுப்பயணத்தில், முதல் நிறுத்தமான மைசூரில், மாதா அமிர்தானந்த மயி பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில், நிவாரணம் வழங்குவது குறித்த இந்த அறிவிப்பை மாதா அமிர்தானந்தமயி மடம் வெளியிட்டுள்ளது, எனக் கூறிப்பிடப்பட்டிருந்தது.