கோவை : கோவை மாவட்டத்தின் மாநகராட்சி ஆணையருக்கு பணியிட மாற்றம் வழங்கியதை அடுத்து, கோவைக்கு நியமிக்கப்பட்ட புதிய மாநகராட்சி ஆணையர் இன்று பொறுப்பேற்றுள்ளார்.
கோவை : கோவை மாவட்டத்தின் மாநகராட்சி ஆணையருக்கு பணியிட மாற்றம் வழங்கியதை அடுத்து, கோவைக்கு நியமிக்கப்பட்ட புதிய மாநகராட்சி ஆணையர் இன்று பொறுப்பேற்றுள்ளார்.

கோவை மாவட்டத்தில், முன்னதாக பணியாற்றிய மாநகராட்சி ஆணையர் டி.என்.விஜய கார்த்திகேயன், தமிழ்நாடு நகரியல் பயிற்சி மையத்தின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணி மாற்றத்தையடுத்து, கோவைக்கு புதிய மாநகராட்சி ஆணையர் பொறுப்பிற்கு ஜெ.ஷ்ராவன் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக, திருப்பூரில் துணை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ஜெ.ஷ்ராவன் குமார் ஐ.ஏ.எஸ், கோவை மாநகராட்சி ஆணையராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.
இவர், தெலுங்கானா மாநிலம், நாலகொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர். மும்பை ஐஐடியில் 2006ம் ஆண்டு மின்னணு தொடர்பு பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், ஐ.ஏ.எஸ்., தேர்வில் இந்திய அளவில் 52வது இடம் பிடித்துள்ளார். மேலும், அவரது முதல் பணியினை திருச்சி துணை ஆட்சியராகத் தொடங்கினார்.
கோவை மாவட்டத்தை இனி வரும் காலங்களில் வாழ்வதற்கு ஏற்ற எழில்மிகு கோவையாக மாற்றுவதே தனது இலக்கு என ஷரவன் குமார் தெரிவித்துள்ளார். மேலும், மாநகரின் சுத்தம் மற்றும் மேம்பாட்டுப்பணிகளில் சிறப்பான பங்களிப்பு அளிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.