கோவை : கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டதாகப் புகார் கூறிய பெற்றோர், சிபிசிஐடி விசாரணை தேவை என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டதாகப் புகார் கூறிய பெற்றோர், சிபிசிஐடி விசாரணை தேவை என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில், இருதய நோய் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மீண்டும் குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அப்போது, குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, பெற்றோர் கூறுகையில், "கோவை அரசு மருத்துவமனை தவிர வேறு எங்கும் குழந்தையை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவில்லை", என்றனர்.
இதற்கிடையில், மருத்துவமனை நிர்வாகம், இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது, மக்கள் கண்காணிப்பகத்தினர் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது ;- கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு இரத்தம் ஏற்றிய பின்பு தான், எச்ஐவி பாதிப்பு ஏற்படுள்ளது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டோர் தரப்பில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து புகார் தெரிவிப்பதற்குள் அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது பிரச்சினையை உறுதிபடுத்துவதாக உள்ளது, என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், சிபிசிஐடி விசாரணை தேவை என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டது. இந்த விவாகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த சமயத்தில், கோவை அரசு மருத்துவமனை தரப்பில், இது போன்ற தவறுகள் கோவை அரசு மருத்துவமனையில் நடக்க வாய்ப்பில்லை என உறுதித் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதாக எழும் புகார்கள் பெரும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்துகின்றன.