கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் : மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இரத்தம் ஏற்றப்பட்டதாகப் புகார் எழுந்ததையடுத்து, மருத்துவமனையின் முதல்வர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இரத்தம் ஏற்றப்பட்டதாகப் புகார் எழுந்ததையடுத்து, மருத்துவமனையின் முதல்வர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில், இருதய நோய் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக, குழந்தைக்கு சிகிச்சைக்காக ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. தற்போது, மீண்டும் குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அப்போது, குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

இதையடுத்து, குழந்தையின் பெற்றோர்கள் இருவருக்கும் எச்.ஐ.வி சோதனை செய்யப்பட்டது. இதில், அவர்களுக்கு பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப்பட்டது. மேலும், இது குறித்து பெற்றோர் தரப்பில் கூறும் போது, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வேறு எங்கும் குழந்தையை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவில்லை, என்கிறார்கள்.

இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டதில் பிரச்சினை இருந்திருக்க வாய்ப்பு இல்லை, எனத் தெரிவித்துள்ளனர். மேலும், பெற்றொரின் புகாரைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் விசாரணை நடத்தி வருகிறார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...