கோவை : திருவனந்தபுரம், அகமதாபாத் உள்ளிட்ட 6 விமானநிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தினர் வரும் 20-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
கோவை : திருவனந்தபுரம், அகமதாபாத் உள்ளிட்ட 6 விமானநிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தினர் வரும் 20-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
வரும் பிப்ரவரி மாதம் அகமதாபாத், கவுகாத்தி, மங்களூரூ, லக்னோ மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 விமான நிலையங்களை 50 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தனியார்வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு நாடு முழுவதும் உள்ள விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கடந்த டிச.,10-ம் தேதி முதல் 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
"சுமார் 120 விமான நிலைய ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து நாளை பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது எங்களது கோரிக்கைகளை முன்வைப்போம். உடன்பாடு ஏற்படவில்லையெனில் வேலைநிறுத்தம் உறுதியாக நடைபெறும்," என்றார் விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர்.
வரும் பிப்ரவரி மாதம் அகமதாபாத், கவுகாத்தி, மங்களூரூ, லக்னோ மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 விமான நிலையங்களை 50 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தனியார்வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு நாடு முழுவதும் உள்ள விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கடந்த டிச.,10-ம் தேதி முதல் 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
"சுமார் 120 விமான நிலைய ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து நாளை பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது எங்களது கோரிக்கைகளை முன்வைப்போம். உடன்பாடு ஏற்படவில்லையெனில் வேலைநிறுத்தம் உறுதியாக நடைபெறும்," என்றார் விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர்.