கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு : மார்ச் 04-ம் தேதி ஆஜராக குற்றவாளிகளுக்கு உத்தரவு

நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணைக்காக, குற்றவாளிகளை வரும் மார்ச் 4-ம் தேதி நேரில் ஆஜராக உதகை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணைக்காக, குற்றவாளிகளை வரும் மார்ச் 4-ம் தேதி நேரில் ஆஜராக உதகை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். மீதமுள்ள சயான், மனோஜ், திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர்அலி, சந்தோஸ்சாமி, உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது நேரில் ஆஜராகியும் வந்தனர். இந்த நிலையில், கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய 10 பேரையும் மாவட்ட நீதிமன்றம் கடந்த பிப்., 8-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஜம்சீர் அலி, சதீசன், சயான், வாளையார் மனோஜ் உதயகுமார், சந்தோஷ்சாமி, மனோஜ், ஜிதின்ஜாய் ஆகிய 6 பேர்கள் மட்டுமே ஆஜராகினர். பிஜின், திபு, சயான், வாளையார் மனோஜ் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகாத 4 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி வடமலை உத்தரவிட்டிருந்தார். 



இந்த நிலையில், பிஜின்குட்டி மற்றும் தீபு ஆகிய இருவரையும் கேரள மாநிலத்தில் நீலகிரி தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளிகலான சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இதனிடையே, இன்று உதகை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் காலை 11 மணிக்கு 5 குற்றவாளிகள் நேரில் ஆஜராகினர். அப்போது, மனோஜ் சாமி என்ற குற்றவாளி ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், எற்கனவே கைது செய்யப்பட்ட தீபு மற்றும் பிஜின் ஆகியோரை கோவை சிறையிலிருந்து போலீஸார் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தினர். பின்னர், வரும் மார்ச் 4-ம் தேதி அனைத்து குற்றவாளிகளும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி வடமலை ஆணை பிறப்பித்துள்ளார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...