திருப்பூர் : செல்போன் டவர் அமைக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் எஸ்.வி.நகர் பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர் : செல்போன் டவர் அமைக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் எஸ்.வி.நகர் பொதுமக்கள் மனு அளித்தனர்.
எஸ்.வி. நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், குடியிருப்பு பகுதி நடுவிலேயே செல்போன் டவரை அமைக்கும் நடவடிக்கையில் தனியார் நிறுவனத்தினர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, செல்போன் டவர் உள்ள நிலையில், மீண்டும் ஒரு கோபுரம் அமைக்கும் தனியார் நிறுவனத்தின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என எஸ்.வி.நகர் பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

மேலும், எஸ்.வி.நகரில் உள்ள தெருநாய்கள், சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், வயதானவர்கள் என பலரை கடித்துள்ளது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரியும், அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டு மாதங்களாகியும், பூங்காவை திறக்காமல் காலம் கடத்தி வரும் செயலைக் கண்டிப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எஸ்.வி. நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், குடியிருப்பு பகுதி நடுவிலேயே செல்போன் டவரை அமைக்கும் நடவடிக்கையில் தனியார் நிறுவனத்தினர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, செல்போன் டவர் உள்ள நிலையில், மீண்டும் ஒரு கோபுரம் அமைக்கும் தனியார் நிறுவனத்தின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என எஸ்.வி.நகர் பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

மேலும், எஸ்.வி.நகரில் உள்ள தெருநாய்கள், சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், வயதானவர்கள் என பலரை கடித்துள்ளது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரியும், அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டு மாதங்களாகியும், பூங்காவை திறக்காமல் காலம் கடத்தி வரும் செயலைக் கண்டிப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.