கோவை : காஷ்மீரில் தற்கொலைப் படையினர் தாக்குதலால், வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு, கோவை மாவட்ட ஹார்டுவேர் சங்க உறுப்பினர்கள் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
கோவை : காஷ்மீரில் தற்கொலைப் படையினர் தாக்குதலால், வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு, கோவை மாவட்ட ஹார்டுவேர் சங்க உறுப்பினர்கள் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், சி.ஆர்.ஆர்.எஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோத செய்து, தற்கொலை படை நிகழ்த்திய தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உட்பட, 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த கொடூர சம்பவத்திற்கு இந்தியாவின் சார்பில் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஹார்டுவேர் சங்க உறுப்பினர்கள் இணைந்து உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பேரணி நடத்தினர். இந்த பேரணியானது, மேட்டுப்பாளையம் சாலை அருகே உள்ள காமராஜபுரத்தில் நடைபெற்றது. இதில், வீரமரணமடைந்த வீரர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், இறந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்று சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கடைகளை அடைத்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், சி.ஆர்.ஆர்.எஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோத செய்து, தற்கொலை படை நிகழ்த்திய தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உட்பட, 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த கொடூர சம்பவத்திற்கு இந்தியாவின் சார்பில் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஹார்டுவேர் சங்க உறுப்பினர்கள் இணைந்து உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பேரணி நடத்தினர். இந்த பேரணியானது, மேட்டுப்பாளையம் சாலை அருகே உள்ள காமராஜபுரத்தில் நடைபெற்றது. இதில், வீரமரணமடைந்த வீரர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், இறந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்று சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கடைகளை அடைத்துள்ளனர்.