கோவை : 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த வரும் தங்களுக்கு இலவச பட்டாவை வழங்க வலியுறுத்தி கோவை மாவட்டம் சாய்பாபா காலனியை அடுத்த ஜீவா நகர் மக்கள், ஆதார் மற்றும் ரேசன் அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த வரும் தங்களுக்கு இலவச பட்டாவை வழங்க வலியுறுத்தி கோவை மாவட்டம் சாய்பாபா காலனியை அடுத்த ஜீவா நகர் மக்கள், ஆதார் மற்றும் ரேசன் அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது :- தாங்கள் 45 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகிறோம். இலவச பட்டா வழங்கக்கோரி பல வருடங்களாக மனு அளித்த வரும் நிலையில், பட்டா பெற பலர் குடிசை மாற்று வாரியத்தில் பணம் செலுத்தி உள்ளனர். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மின் இணைப்பை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் இணைப்பை துண்டிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம்.
குடிசை மாற்று வாரியம் சார்பில் மாற்றாக கீரணத்தம் பகுதியில் வீடுகள் ஒதுக்கி தருவதாக கூறியுள்ளனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் பலர் தினக்கூலிகளாகவும், கல்வி பயில்பவர்களாகவும் இருப்பதால், அவர்களது அன்றாட நிலையைக் கருத்தில் கொண்டு, மாநகராட்சி எல்லைக்கு உள்ளேயே மாற்று இடங்கள் வழங்கிட வேண்டும், இவ்வாறு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, தங்களை வேறு இடத்தில் குடியமர்த்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களது ஆதார் மற்றும் ரேசன் அட்டையை ஒப்படைக்க போவதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது :- தாங்கள் 45 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகிறோம். இலவச பட்டா வழங்கக்கோரி பல வருடங்களாக மனு அளித்த வரும் நிலையில், பட்டா பெற பலர் குடிசை மாற்று வாரியத்தில் பணம் செலுத்தி உள்ளனர். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மின் இணைப்பை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் இணைப்பை துண்டிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம்.
குடிசை மாற்று வாரியம் சார்பில் மாற்றாக கீரணத்தம் பகுதியில் வீடுகள் ஒதுக்கி தருவதாக கூறியுள்ளனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் பலர் தினக்கூலிகளாகவும், கல்வி பயில்பவர்களாகவும் இருப்பதால், அவர்களது அன்றாட நிலையைக் கருத்தில் கொண்டு, மாநகராட்சி எல்லைக்கு உள்ளேயே மாற்று இடங்கள் வழங்கிட வேண்டும், இவ்வாறு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, தங்களை வேறு இடத்தில் குடியமர்த்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களது ஆதார் மற்றும் ரேசன் அட்டையை ஒப்படைக்க போவதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.