கோவை : அரசு மருத்துவமனையில், பிரசவித்த தாய் சேயினை இலவசமாக வீட்டில் சேர்க்கும் 102 ஆம்புலன்ஸ் சேவை மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் தொடங்குகிறது.
கோவை : அரசு மருத்துவமனையில், பிரசவித்த தாய் சேயினை இலவசமாக வீட்டில் சேர்க்கும் 102 ஆம்புலன்ஸ் சேவை மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் தொடங்குகிறது.

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாயையும் சேயையும் இலவசமாக வீட்டில் சேர்க்கும் விதமாக, தமிழக அரசின் சுகாதரத்துறை மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் 102 என்ற ஆம்புலன்ஸ் சேவை தொடங்கபட்டுள்ளது. இந்த திட்டத்திற்கென தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 161 வாகனங்கள் வாங்கபட்ட நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று இத்திட்டம் தொடங்கபட்டுள்ளது.
சுமார் ஒன்பது லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில், 15 நபர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கபட்டுள்ளன. பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையினை நாடி வரும் ஏழை மக்கள் பிரசவம் முடித்து வீட்டிற்கு செல்லும் போது சிரமம் இன்றி செல்லும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரபட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தாய்மார்களுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கபட்டது. இதன் படி, பிரசவித்த தாய்மாருக்கு தமிழக அரசின் குழந்தைகள் சிறப்பு பெட்டக பரிசு பொருட்கள் கொடுத்து, இந்த வாகனத்தில் அவர்களது வீட்டிற்கே கொண்டு சென்று விடப்படும். இந்த திட்டத்தினை இன்று மேட்டுப்பாளையத்தில், மாநிலங்களை உறுப்பினர். ஏ.கே செல்வராஜ், ஓ.கே சின்னராஜ் கொடியைசைத்து தொடக்கி வைத்தனர். முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும் இந்த சேவை பிரசவ காலம் முடிந்த பின்னும், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடவும் பயன்படுத்திகொள்ளலாம் என கூறபட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாயையும் சேயையும் இலவசமாக வீட்டில் சேர்க்கும் விதமாக, தமிழக அரசின் சுகாதரத்துறை மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் 102 என்ற ஆம்புலன்ஸ் சேவை தொடங்கபட்டுள்ளது. இந்த திட்டத்திற்கென தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 161 வாகனங்கள் வாங்கபட்ட நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று இத்திட்டம் தொடங்கபட்டுள்ளது.
சுமார் ஒன்பது லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில், 15 நபர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கபட்டுள்ளன. பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையினை நாடி வரும் ஏழை மக்கள் பிரசவம் முடித்து வீட்டிற்கு செல்லும் போது சிரமம் இன்றி செல்லும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரபட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தாய்மார்களுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கபட்டது. இதன் படி, பிரசவித்த தாய்மாருக்கு தமிழக அரசின் குழந்தைகள் சிறப்பு பெட்டக பரிசு பொருட்கள் கொடுத்து, இந்த வாகனத்தில் அவர்களது வீட்டிற்கே கொண்டு சென்று விடப்படும். இந்த திட்டத்தினை இன்று மேட்டுப்பாளையத்தில், மாநிலங்களை உறுப்பினர். ஏ.கே செல்வராஜ், ஓ.கே சின்னராஜ் கொடியைசைத்து தொடக்கி வைத்தனர். முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும் இந்த சேவை பிரசவ காலம் முடிந்த பின்னும், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடவும் பயன்படுத்திகொள்ளலாம் என கூறபட்டுள்ளது.