கோவை : கேரளாவில் காங்கிரசை சேர்ந்த இளைஞர் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் சார்பில் கேரளாவில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : கேரளாவில் காங்கிரசை சேர்ந்த இளைஞர் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் சார்பில் கேரளாவில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரள மாநிலம் செல்லும் 27 பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பாக 18 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழகம், தனியார் என 9 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று பந்த் காரணமாக, பாதுகாப்பு கருதி இந்த 27 பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன," என்றார்.
பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் கேரளா செல்லும் பயனிகளின் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும், போலீசார் பாதுகாப்புடன் தேவைப்பட்டால், பேருந்துகள் இயக்கவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக, கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரள மாநிலம் செல்லும் 27 பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பாக 18 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழகம், தனியார் என 9 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று பந்த் காரணமாக, பாதுகாப்பு கருதி இந்த 27 பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன," என்றார்.
பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் கேரளா செல்லும் பயனிகளின் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும், போலீசார் பாதுகாப்புடன் தேவைப்பட்டால், பேருந்துகள் இயக்கவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.