ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் அளித்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் அளித்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உடல் உபாதைகள் காரணமாக அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது. இதையடுத்து, போலீசார் வன்முறையைக் கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர்.
அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசாணை பிறப்பித்தது. அதன்படி மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதையடுத்து, வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மனு அளித்தது. அதனை விசாரித்து, சில நிபந்தனைகளுடன் ஆலையைமீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, நீதிபதிகள் நாரிமன் மற்றும் நவின் சின்ஹா அடங்கிய பெஞ்சில் வேதாந்தா எதிர் புகார் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்களின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது.
தற்போது, அனைத்து விசாரணைகளும் வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில், வேதாந்தா மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க இடைக்காலத் தடை விதித்ததுடன், வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உடல் உபாதைகள் காரணமாக அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது. இதையடுத்து, போலீசார் வன்முறையைக் கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர்.
அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசாணை பிறப்பித்தது. அதன்படி மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதையடுத்து, வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மனு அளித்தது. அதனை விசாரித்து, சில நிபந்தனைகளுடன் ஆலையைமீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, நீதிபதிகள் நாரிமன் மற்றும் நவின் சின்ஹா அடங்கிய பெஞ்சில் வேதாந்தா எதிர் புகார் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்களின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது.
தற்போது, அனைத்து விசாரணைகளும் வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில், வேதாந்தா மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க இடைக்காலத் தடை விதித்ததுடன், வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.