திருப்பூர் : குடிபோதையில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினரால் கீழே இறக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் : குடிபோதையில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினரால் கீழே இறக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர், கொங்கு மெயின்ரோடு பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தின் மீது உள்ள 50 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் மீது குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் ஏறினார். பின்பு, அந்த இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் டவர் மீது ஏறிய இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமாராக, ஒரு மணி நேரத்திற்குப் பின் அவரைக் கீழே இறக்கினர். அந்த வாலிபரை கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சபீர் என்பதும், திருப்பூரில் பிரிண்டிங்க் பட்டறையில் தங்கி பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. மேலும், சபீர் டவர் மீது ஏறுவதற்கு முன் குடிபோதையில் தன் நண்பர்களிடம் காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தீயணைப்புத்துறையினர் அவரைக் கீழே இறக்க முயற்சித்தபோது, காஷ்மீர் புல்வாமா தாக்குதலை மையப்படுத்திக் குறிப்பிட்ட மதம் குறித்துச் சமூக வலைதளங்களில் பரப்பியதால் மனமுடைந்த தற்கொலை செய்துகொள்ளச் சென்றதாக இருவேறு காரணங்களைத் தெரிவித்துள்ளார். அவர் அதிகமான குடிபோதையில் இருந்ததால், போலீசார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேடிக்கை பார்க்க பொதுமக்கள் அதிகளவில் கூடியதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

திருப்பூர், கொங்கு மெயின்ரோடு பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தின் மீது உள்ள 50 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் மீது குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் ஏறினார். பின்பு, அந்த இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் டவர் மீது ஏறிய இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமாராக, ஒரு மணி நேரத்திற்குப் பின் அவரைக் கீழே இறக்கினர். அந்த வாலிபரை கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சபீர் என்பதும், திருப்பூரில் பிரிண்டிங்க் பட்டறையில் தங்கி பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. மேலும், சபீர் டவர் மீது ஏறுவதற்கு முன் குடிபோதையில் தன் நண்பர்களிடம் காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தீயணைப்புத்துறையினர் அவரைக் கீழே இறக்க முயற்சித்தபோது, காஷ்மீர் புல்வாமா தாக்குதலை மையப்படுத்திக் குறிப்பிட்ட மதம் குறித்துச் சமூக வலைதளங்களில் பரப்பியதால் மனமுடைந்த தற்கொலை செய்துகொள்ளச் சென்றதாக இருவேறு காரணங்களைத் தெரிவித்துள்ளார். அவர் அதிகமான குடிபோதையில் இருந்ததால், போலீசார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேடிக்கை பார்க்க பொதுமக்கள் அதிகளவில் கூடியதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.