கோவை : கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தோர் பேருந்து வசதி இல்லாததால் மிகுந்த அவதியடைந்தனர்.
கோவை : கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தோர் பேருந்து வசதி இல்லாததால் மிகுந்த அவதியடைந்தனர்.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கம் சார்பாக செட்டிபாளையம் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் இரண்டாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண கோவை காந்திபுரம், பீளமேடு, டவுன்ஹால், சின்னியம்பாளையம், போத்தனூர், மேட்டுப்பாளையம், அன்னூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களும், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட மக்களும் என சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர்.

விடுமுறை தினம் என்பதால் பலரும் குடும்பத்துடன் வந்திருந்தினர். ஆனால், மக்கள் வந்து போக வசதியாக அங்கு பேருந்து வசதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தி தரப்படவில்லை. பைபாஸ் சாலை என்பதால் பேருந்து நிறுத்தம் செல்ல சுமார் 3 கி.லோ மீட்டர் தூரம் வரை ஊருக்குள் செல்ல வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியை அடுத்து, அங்கு தற்காலிகமாக பேருந்து நிறுத்தம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் அமைக்கப்படாததால் மக்கள் சுமார் 3 கி.லோ மீட்டர் தூரம் வரை நடந்தே பேருந்து நிலையங்கள் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால், மக்கள் மிகுந்த அவதியடைந்தனர்.

இது குறித்து ஜல்லிக்கட்டு போட்டி காண வந்த சுகுமார் என்பவர் கூறுகையில், "கடந்த ஆண்டும் இதே பிரச்சினைதான். பேருந்து நிறுத்தம் அமைக்காததால், பேருந்து வசதி இல்லாமல் மிகவும் அவதியடைந்தோம். இந்தாண்டும் இதே நிலைதான்," என்றார்.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கம் சார்பாக செட்டிபாளையம் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் இரண்டாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண கோவை காந்திபுரம், பீளமேடு, டவுன்ஹால், சின்னியம்பாளையம், போத்தனூர், மேட்டுப்பாளையம், அன்னூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களும், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட மக்களும் என சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர்.

விடுமுறை தினம் என்பதால் பலரும் குடும்பத்துடன் வந்திருந்தினர். ஆனால், மக்கள் வந்து போக வசதியாக அங்கு பேருந்து வசதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தி தரப்படவில்லை. பைபாஸ் சாலை என்பதால் பேருந்து நிறுத்தம் செல்ல சுமார் 3 கி.லோ மீட்டர் தூரம் வரை ஊருக்குள் செல்ல வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியை அடுத்து, அங்கு தற்காலிகமாக பேருந்து நிறுத்தம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் அமைக்கப்படாததால் மக்கள் சுமார் 3 கி.லோ மீட்டர் தூரம் வரை நடந்தே பேருந்து நிலையங்கள் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால், மக்கள் மிகுந்த அவதியடைந்தனர்.

இது குறித்து ஜல்லிக்கட்டு போட்டி காண வந்த சுகுமார் என்பவர் கூறுகையில், "கடந்த ஆண்டும் இதே பிரச்சினைதான். பேருந்து நிறுத்தம் அமைக்காததால், பேருந்து வசதி இல்லாமல் மிகவும் அவதியடைந்தோம். இந்தாண்டும் இதே நிலைதான்," என்றார்.