நீலகிரி கூட்டுறவு தொழிற்சாலை பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் : இன்கோ நிர்வாகம் அறிவிப்பு

நீலகிரி : கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பச்சை தேயிலைக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக குன்னூரில் உள்ள இன்கோ தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

நீலகிரி : கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பச்சை தேயிலைக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக குன்னூரில் உள்ள இன்கோ தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை ஏராளமான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நம்பியுள்ளனர். மேலும், 16 கூட்டுறவு தொழிற்சாலைகளும், 100 -க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. பச்சை தேயிலைக்கு விலை வீழ்ச்சி நீடித்து வந்ததால், குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 



இதனைத் தொடர்ந்து குன்னூர் இன்கோ சர்வ் நிர்வாகம், அனைத்துக் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளிலும் கொள்முதல் செய்யும் பச்சை தேயிலைக்கு மாதந்தோறும் முன்கூட்டியே குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி, நடப்பு பிப்ரவரி மாதத்துக்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

கைகாட்டி, இத்தலார், நஞ்சநாடு, கரும்பாலம் ஆகிய தொழிற்சாலைகளில் ரூ.17, எடக்காடு, மஞ்சூர், பிக்கட்டி, மேற்குநாடு, மகாலிங்கா, கிண்ணக்கொரை ஆகிய தொழிற்சாலைகளில் ரூ.16, சாலீஸ்பரி, பந்தலூர் தொழிற்சாலைகளில் ரூ.15, பிராண்டியர், பிதர்காடு ஆகிய தொழிற்சாலைகளில் ரூ.14.50 பைசா, எப்பநாடு தொழிற்சாலையில் ரூ.14 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக இன்கோ அறிவித்துள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...