காஷ்மீரில் தற்கொலைப் படையினர் தாக்குதல் : வீரமரணமடைந்த ராணுவத்தினருக்கு கோவையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

கோவை : கோவையைச் சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, ரேஸ் கோர்ஸ் பகுதியில் இன்று நடைபெற்றது.


கோவை : கோவையைச் சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, ரேஸ் கோர்ஸ் பகுதியில் இன்று நடைபெற்றது. 



காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், நேற்று முன்தினம் துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து, பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர், வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்கச்செய்து கொடிய தாக்குதல் நடத்தினர். 

நாட்டையே உலுக்கி உள்ள இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 



கோவை பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம் கௌமார மடாலயம், யுனிவர்சல் பிரதர்குட் அசோசியேஷன், சிறுதுளி, ஆர்.ஏ.ஏ.சி, கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத், தமிழ்நாடு கத்தோலிக்க சபை, டி.ஏ.எஸ்.கே, ஜமாத்-ஈ-இஸ்லாமி ஹிந்த் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்நிகழ்வில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு, அனைத்து மதத்தினர் சார்பிலும் பிரார்த்தனை செய்யப்பட்டு, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், வெள்ளலூர் ஆர்.ஏ.எஃப் படையின் செகண்டட் கமாண்டெண்ட் சதீஷ் கே டூபே (Sathish K Dubby, Secondant Commandant, RAF- Vellalore), சிறுதுளி அமைப்பின் அறங்காவலர், வனிதா மோகன் விவசாயிகள் சங்கத்தினர், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...