மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில் துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன : நடிகை அமலா

கோவை : 'மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில் துறையில் இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக நடிகை அமலா தெரிவித்துள்ளார்.


கோவை : 'மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில் துறையில் இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக நடிகை அமலா தெரிவித்துள்ளார். 

பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மீடியா துறையில் பணிபுரிந்து வரும் மாணவர்களுக்கான 'மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில்' குறித்த பயிலரங்கு இன்று நடைபெற்றது. ஜி.ஆர்.டி. கலையரங்கில் நடந்த இந்தப் பயிலரங்கு நிகழ்ச்சியில், நடிகையும், அண்ணாபூர்ணா இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் ஃபிலிம் & மீடியாவின் போர்டு உறுப்பினருமான அமலா அக்கினி கலந்து கொண்டார். 

பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டி. பிருந்தா தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனத்தின் அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் ஆர். நந்தகுமார் பங்கேற்றார். 

நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மீடியா மற்றும் அதனைச் சார்ந்துள்ள சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மீடியா துறையில் மாணவர்களின் எதிர்காலம் குறித்து நடிகை அமலா விளக்கினார். 

அவர் பேசியதாவது :- தொழில்துறையில் புதுமை மற்றும் தொழில்நுட்பம் மிகவும் அவசியம். மற்றவர்களின் ஆய்வுகளை ஆராய்வதன் மூலம், புதுமையை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கும். சரியான அணுகுமுறை, கடின உழைப்பு, தொழில் திறன், படைப்பாற்றல், தொழில்நுட்பத் திறன் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை பெற்றிருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். திறன்களும், திறமைகளும் மீடியா உலகில் நம்மை தக்க வைக்கும், எனக் கூறினார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...