ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்யை 3 முறைக்கு மேல் உபயோகிக்கத் தடை : புதிய கட்டுப்பாடுகள் வரும் மார்ச் 3-ம் தேதி முதல் அமல்

கோவை : நாடு முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் ஒரு சமையல் எண்ணெய்யை 3 முறைக்கு மேல் பயன்படுத்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது.


கோவை : நாடு முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் ஒரு சமையல் எண்ணெய்யை 3 முறைக்கு மேல் பயன்படுத்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது. 

 இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் செயல்பட்டு வரும் உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளை நீண்ட நாள் பயன்படுத்தக் கூடாது. 

சமையல் எண்ணெயை பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடுகள் வரும் மார்ச் 3-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதாவது, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை 3 முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. 

அவ்வாறு பயன்படுத்துவதன் மூலம், மனிதர்களின் உடலில் வேதிப்பொருள், ஊட்டச்சத்து மற்றும் உணர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே, ஓட்டல்கள் மற்றும் உணவகங்களை வைத்திருப்போர்கள் நாள்தோறும் அடிப்படையில் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். 

3 முறைக்கு மேல் பயன்படுத்தப்படும் எண்ணெய் பொருட்கள் விஷமப் பொருளாக மாறுகிறது. எண்ணெய் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால், உடலில் மொத்த போலார் காம்பவுண்ட்ஸ் சேர்ந்து எதிர்மறையான செயல்களை ஏற்படுத்தும். குறிப்பாக உயர் அழுத்தம், சிறுநீரக நோய், கொழுப்பு அதிகரிப்பு, ஆத்ரோஸ்கிளெரோஸிஸ் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகிறது.

 

உணவகங்களை நடத்தி வருபவர்கள் ஒருநாளைக்கு 50 லிட்டர் எண்ணெயை பயன்படுத்தி வந்தால், அதன் விபரங்களையும், அப்புறப்படுத்த எண்ணெய்யின் விபரங்களையும் முறையாகப் பராமரித்து வர வேண்டும். எண்ணெய் பயன்படுத்தப்பட்ட நாள் மற்றும் அது எவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டது என்பது பற்றியும் அன்றாடம் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...