மேட்டுப்பாளையத்தில் நாடாளு,. தேர்தலில் அளித்த வாக்கை உறுதி செய்யும் மாதிரி பயிற்சி

கோவை : நாடாளுமன்ற தேர்தலில் பதிவு செய்த வாக்கினை வாக்காளர்கள் உறுதி செய்யும் இயந்திரத்திற்கான பயிற்சி மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வருகிறது.

கோவை : நாடாளுமன்ற தேர்தலில் பதிவு செய்த வாக்கினை வாக்காளர்கள் உறுதி செய்யும் இயந்திரத்திற்கான பயிற்சி மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதி செய்யும் கருவி இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் இதற்கான பயிற்சியும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.



இதையொட்டி, மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் வசிக்கும் வாக்காளர்களுக்கு 33 வார்டுகளிலும், நகராட்சி ஆணையர் காந்திராஜ் உத்தரவின் பேரில், நகராட்சி பணியாளர் ஜெயராமன் தலைமையில் 6 பேர் கொண்ட இரு குழுவினர் வாக்காளர் அளித்த வாக்கினை உறுதி செய்யும் இயந்திரத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 



மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், அண்ணா மார்க்கெட், எம்.எஸ்.ஆர். புரம், கெண்டையூர், சிறுமுகை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு யாருக்கு வாக்களித்தோம் என்பதனை தெரிந்து கொள்ளும் மாதிரி பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...