தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நேற்று மாலை ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி வெடிமருந்து நிரப்பிய காருடன் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதி தாக்குதல் நடத்தினார். இந்த கோர தாக்குதலில் 41 வீரர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். அவர்களில் 38 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த வீரர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி நேற்றைய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். மற்றொரு வீரரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
ஐ.டி.ஐ. வரை படித்துள்ள சுப்பிரமணி, 5 ஆண்டுகளுக்கு முன்பு சி.ஆர்.பி.எப் பணியில் இணைந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த இவருக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், ஜம்மூ - காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்த சுப்பிரமணி, கடைசியாக நேற்று மதியம் தனது மனைவிக்கு போன் செய்து பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து, தீவிராத தாக்குதல் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், மாலை மீண்டும் ஜம்மூ - காஷ்மீரில் இருந்து சுப்பிரமணியின் குடும்பத்தினருக்கு அழைப்பு வந்துள்ளது. தனது கணவர்தான் அழைத்துள்ளார் என ஆசையுடன் எடுத்துப் பேசிய சுப்பிரமணியின் மனைவிற்கு, தான் கேட்ட செய்தியினால் ஒருநிமிடம் இதயம் துடிப்பது நின்று போனாலானது. இதைத் தொடர்ந்து, சுப்ரமணியின் இறப்புச் செய்தி கேட்டு அவரது குடும்பத்தினரும், சொந்த ஊர் மக்களும் சொல்லில் அடங்கா துயரத்தில் ஆழ்ந்தனர். பின்னர், வீரமரணமடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியின் வீட்டின் முன்பு பொதுமக்களும், உறவினர்களும் குவிந்து வருகின்றனர்.
தற்போது, காஷ்மீரில் உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இன்று இரவுக்குள் இறுதி மரியாதைக்காக சுப்பிரமணியின் உடல் தூத்துக்குடி கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நேற்று மாலை ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி வெடிமருந்து நிரப்பிய காருடன் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதி தாக்குதல் நடத்தினார். இந்த கோர தாக்குதலில் 41 வீரர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். அவர்களில் 38 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த வீரர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி நேற்றைய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். மற்றொரு வீரரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
ஐ.டி.ஐ. வரை படித்துள்ள சுப்பிரமணி, 5 ஆண்டுகளுக்கு முன்பு சி.ஆர்.பி.எப் பணியில் இணைந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த இவருக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், ஜம்மூ - காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்த சுப்பிரமணி, கடைசியாக நேற்று மதியம் தனது மனைவிக்கு போன் செய்து பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து, தீவிராத தாக்குதல் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், மாலை மீண்டும் ஜம்மூ - காஷ்மீரில் இருந்து சுப்பிரமணியின் குடும்பத்தினருக்கு அழைப்பு வந்துள்ளது. தனது கணவர்தான் அழைத்துள்ளார் என ஆசையுடன் எடுத்துப் பேசிய சுப்பிரமணியின் மனைவிற்கு, தான் கேட்ட செய்தியினால் ஒருநிமிடம் இதயம் துடிப்பது நின்று போனாலானது. இதைத் தொடர்ந்து, சுப்ரமணியின் இறப்புச் செய்தி கேட்டு அவரது குடும்பத்தினரும், சொந்த ஊர் மக்களும் சொல்லில் அடங்கா துயரத்தில் ஆழ்ந்தனர். பின்னர், வீரமரணமடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியின் வீட்டின் முன்பு பொதுமக்களும், உறவினர்களும் குவிந்து வருகின்றனர்.
தற்போது, காஷ்மீரில் உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இன்று இரவுக்குள் இறுதி மரியாதைக்காக சுப்பிரமணியின் உடல் தூத்துக்குடி கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.