கோவை : ஜனவரி மாதத்திற்குரிய ஓய்வூதியம் வழங்கப்படாததைக் கண்டித்து கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் 1,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : ஜனவரி மாதத்திற்குரிய ஓய்வூதியம் வழங்கப்படாததைக் கண்டித்து கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் 1,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள டி.என்.எஸ்.டி.சி கோவை தலைமை அலுவலகம் முன்பு நடந்த இப்போராட்டத்தின் போது, கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒய்வூதியர்களுக்கு ஜனவரி மாதம் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியம் காலதாமதம் இல்லாமல் எல்லா மாதங்களிலும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து ஓய்வுபெற்றோர் நலஅமைப்பு பொதுச்செயலாளர் செல்வராஜ் கூறுகையில், "கோவை மண்டலத்தில் 7,000 ஒய்வூதியர்கள் உள்ளனர். ஜனவரி 10-ம் தேதி வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் இன்று வரை முழுமையாக வழங்கப்படவில்லை. தற்போது வரை 3,000 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் காலதாமதம் இல்லாமல் வழங்கப்பட வேண்டும்," என்றார்.