ஜம்மூ - காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதல் : 2 தமிழக வீரர்கள் உள்பட 41 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வாகனம் மீது தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உள்பட 41 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வாகனம் மீது தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உள்பட 41 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, காரில் சென்ற தீவிரவாதி, திடீரென பாதுகாப்பு படை வீரர்கள் வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த பயங்கர தாக்குதலில், 2 தமிழக வீரர்கள் உள்பட பாதுகாப்பு படை வீரர்கள் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த சிலர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

முதற்கட்ட விசாரணையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாதிகளின் இந்த தாக்குதலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...