கோவை : கோவையில் நிதி மோசடியில் ஈடுபட்ட ஃபைன் பியூச்சர் நிறுவனத்தின் ஏஜென்டுகள் 5 பேரை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை : கோவையில் நிதி மோசடியில் ஈடுபட்ட ஃபைன் பியூச்சர் நிறுவனத்தின் ஏஜென்டுகள் 5 பேரை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

பீளமேட்டை தலைமையிடமாகக் கொண்டு ஃபைன் பியூச்சர் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில், முதலீட்டுக்கு அதிக வட்டி தரப்படும் எனக் கூறி கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பல்வேறு மாவட்டங்களில் ரூ. 800 கோடி வரை வசூலித்து மோசடி செய்யப்பட்டு வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் செந்தில்குமார், விவேக் மற்றும் அவரது சகோதரர் நித்யானந்தன், நிறுவனத்தின் ஊழியர் சத்தியலட்சுமி உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இந்த நிலையில், முதலீட்டாளர்கள் எனப்படும் பொதுமக்களிடம் பணத்தை வாங்கி, இந்நிறுவன நிர்வாக இயக்குனரிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு ஒப்படைக்கும் மோசடி பணியில் ஈடுபட்டு வந்த ஏஜென்டுகள் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகார் தொடர்பாக கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த ஏஜென்டுகள் பழனிசாமி (34) வேலுசாமி (32), இளங்கோ (35), கருப்பசாமி (38), சாந்தமூர்த்தி (40) ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

பீளமேட்டை தலைமையிடமாகக் கொண்டு ஃபைன் பியூச்சர் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில், முதலீட்டுக்கு அதிக வட்டி தரப்படும் எனக் கூறி கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பல்வேறு மாவட்டங்களில் ரூ. 800 கோடி வரை வசூலித்து மோசடி செய்யப்பட்டு வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் செந்தில்குமார், விவேக் மற்றும் அவரது சகோதரர் நித்யானந்தன், நிறுவனத்தின் ஊழியர் சத்தியலட்சுமி உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இந்த நிலையில், முதலீட்டாளர்கள் எனப்படும் பொதுமக்களிடம் பணத்தை வாங்கி, இந்நிறுவன நிர்வாக இயக்குனரிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு ஒப்படைக்கும் மோசடி பணியில் ஈடுபட்டு வந்த ஏஜென்டுகள் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகார் தொடர்பாக கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த ஏஜென்டுகள் பழனிசாமி (34) வேலுசாமி (32), இளங்கோ (35), கருப்பசாமி (38), சாந்தமூர்த்தி (40) ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.