கோவை : பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள பட்டத்தரசி அம்மன் கோயிலிலிருந்து சிலை மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், ஒருவரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை : பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள பட்டத்தரசி அம்மன் கோயிலிலிருந்து சிலை மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், ஒருவரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் இந்து சமய அறநிலைய துறைக்குச் சொந்தமான பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை இந்த கோவிலை திறக்க வந்த ஊழியர், கோவிலின் பூட்டு மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்த பொழுது ஒன்றரை அடி உயரமும், 5 கிலோ எடையும் கொண்ட ஐம்பொன்னால் செய்யப்பட்ட பட்டத்தரசியம்மன் சிலை, சிலையில் இருந்த 5 கிராம் தாலிச் சங்கிலி, உண்டியல் பணம் ஆகியவையும் திருடப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், பாப்பநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஸ்ரீ ராமபுரத்தை சேர்ந்த தண்டபாணி (32), மற்றும் அவரது நண்பர் முருகன் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கோயில் செயல் அலுவலர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீஸார் தண்டபாணி, முருகன் மீது அத்துமீறி நுழைதல், திருட்டு, பழமையான மற்றும் கலைப் பொக்கிஷங்கள் பாதுகாப்பு சிறப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். இதில், தண்டபாணி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து திருடப்பட்ட சிலை மீட்கப்பட்டு, சிலை திருட்டு தொடர்பாக விசாரிக்கப்பட்டது. மேலும், தலைமறைவாக உள்ள முருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட தண்டபாணியை ரேஸ்கோர்ஸ் போலீசார், நேற்று முன்தினம் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஐயப்பன், அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, தண்டபாணி அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் இந்து சமய அறநிலைய துறைக்குச் சொந்தமான பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை இந்த கோவிலை திறக்க வந்த ஊழியர், கோவிலின் பூட்டு மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்த பொழுது ஒன்றரை அடி உயரமும், 5 கிலோ எடையும் கொண்ட ஐம்பொன்னால் செய்யப்பட்ட பட்டத்தரசியம்மன் சிலை, சிலையில் இருந்த 5 கிராம் தாலிச் சங்கிலி, உண்டியல் பணம் ஆகியவையும் திருடப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், பாப்பநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஸ்ரீ ராமபுரத்தை சேர்ந்த தண்டபாணி (32), மற்றும் அவரது நண்பர் முருகன் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கோயில் செயல் அலுவலர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீஸார் தண்டபாணி, முருகன் மீது அத்துமீறி நுழைதல், திருட்டு, பழமையான மற்றும் கலைப் பொக்கிஷங்கள் பாதுகாப்பு சிறப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். இதில், தண்டபாணி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து திருடப்பட்ட சிலை மீட்கப்பட்டு, சிலை திருட்டு தொடர்பாக விசாரிக்கப்பட்டது. மேலும், தலைமறைவாக உள்ள முருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட தண்டபாணியை ரேஸ்கோர்ஸ் போலீசார், நேற்று முன்தினம் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஐயப்பன், அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, தண்டபாணி அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.