கோவை : கோவையில் காதலர் தினத்தை கேக் வெட்டியும், பலூன்களை பறக்கவிட்டும் சமூக நீதி கட்சியினர் கொண்டாடினர்.
கோவை : கோவையில் காதலர் தினத்தை கேக் வெட்டியும், பலூன்களை பறக்கவிட்டும் சமூக நீதி கட்சியினர் கொண்டாடினர்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பல்வேறு வகையில் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவையில் காதலர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, இன்று காலையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில், பெரியார் படிப்பகம் முன்புள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர், கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அதை போலவே, சமூக நீதி கட்சியினர், காதலர் தினத்தை ஆதரித்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பலூன்களை பறக்க விட்டும், கேக் வெட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதன் பின்னர் பேசிய அக்கட்சியின் தலைவர் பன்னீர் கூறுகையில், "சாதி, மதம் மறுப்பு மணம் புரிந்தோருக்கு சாதியற்றோர் தனி இட ஒதுக்கீடு வேண்டும். ஆணவ கொலைகளை தடுக்கத் தனி சட்டம் இயற்றிட வேண்டும்," என வேண்டுகோள் விடுத்தார்.