கூட்டணி வைப்பதில் பாஜகவுக்கு யாரோடும் பிரச்சினை கிடையாது : கோவையில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

கோவை : பாஜக கட்சிக்கு, கூட்டணியில் யாரோடும் எந்த பிரச்சனையும் கிடையாது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை : பாஜக கட்சிக்கு, கூட்டணியில் யாரோடும் எந்த பிரச்சனையும் கிடையாது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராகப் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி போராட்டம், தேர்தல் வருவதற்கான அறிகுறி. தேர்தல் வரும் போது இது போல நடக்கும். தமிழகத்தை மிக முக்கியமான மையமாக பாஜக நினைக்கிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு பல திட்டங்களைக் கொடுத்துள்ளது. ஆகவே, பாஜக தலைவர் அமித்ஷா வருகை, பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தைத் தரும். கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசிக்கொண்டு இருக்கின்றோம். அது நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. என்றார். 



அப்போது, கூட்டணிக்காக சில கட்சிகள் தே.மு.தி.க காலில் விழுவதாக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கருத்து தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, "விழுந்தவர்கள் பலமுள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். ஒரு தூணோடு, இன்னோரு தூண் நின்றால் தான் பலம் பொருந்தியதாக இருக்கும். ஒரு தூணில் இன்னொரு தூண் விழுந்தால், அது பலம் அல்ல. என பதிலளித்தார். 

அதனைத் தொடர்ந்து, தம்பிதுரை கருத்துகள் கூட்டணிக்கு இடையூறாக இருக்கிறதா என்ற கேள்விக்கு, அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. தம்பிதுரை எனக்கு நெருங்கிய சகோதரர். தினமும் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம், என பதிலளித்தார். 

மேலும், கூட்டணி குறித்த கேள்விக்கு, "பாஜக கட்சிக்கு, கூட்டணியில் யாரோடும் எந்த பிரச்சனையும் கிடையாது. ஓரிரு நாளில் கூட்டணி அறிவிக்கப்படும். அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கூறியிருப்பது சரியாக இருக்கும். மேலும், கூட்டணி தொடர்பாக இன்று அறிவிக்க வாய்ப்பில்லை, "என்றார் பொன்.ராதாகிருஷ்ணன். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...