கோடை சீசனுக்காக ஆயத்தமாகும் கோத்தகிரி நேரு பூங்கா : 30,000 மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தீவிரம்

நீலகிரி : கோத்தகிரி நேரு பூங்காவில் கோடை சீசனையொட்டி, 30,000 மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


நீலகிரி : கோத்தகிரி நேரு பூங்காவில் கோடை சீசனையொட்டி, 30,000 மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 



கோத்தகிரி நகரில் பேரூராட்சி சார்பில் நேரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் மலர்த் தோட்டம், அழகிய புல்தரை, ரோஜா பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவற்றுடன் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் அமைத்துள்ளது. இந்தப் பூங்காவை பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

நேரு பூங்காவை ஒட்டி புகழ்பெற்ற காந்தி மைதானமும், பூங்கா வளாகத்திலேயே ஆதிவாசி இன மக்களான கோத்தர் இன மக்களின் பழமையான அய்யனார் அம்மனோர் கோவில் அமைந்துள்ளது.

இந்த நேரு பூங்காவிற்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் வந்து பூங்காவை கண்டு களித்து செல்கின்றனர். எனவே, நேரு பூங்கா கோத்தகிரி பகுதியில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குவதுடன், குழந்தைகளின் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்கிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தோட்டக்கலைத் துறை சார்பில் கோடை விழா மாவட்டம் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் ஒரு மாத காலத்திற்கு வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக, மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்கள் சார்பில் பங்கேற்று, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் காய்கறிகளை கொண்டு சிற்பங்களை அமைக்க உள்ளனர்.

நேரு பூங்கா மற்றும் காய்கறி கண்காட்சியைக் கண்டுகளிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவதை முன்னிட்டு, பூங்காவை கோடை சீசனுக்குள் தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

இதற்கான பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதையொட்டி, பூங்காவில் தரையில் வளர்ந்துள்ள புற்களை எந்திரங்கள் மூலம் வெட்டி சமன் செய்து பசுமையாக மாற்ற, ஸ்ப்ரிங்ளர் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா மலர் செடிகளுக்கு கவாத்து செய்யப்பட்டு உள்ளது.

மேலும், கோடை சீசனுக்காக பல்வேறு ரகங்களை சேர்ந்த 30,000 மலர் நாற்றுகள் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. மலர் நாற்றுகளை நடவு செய்வதற்காக மண்ணைப் பதப்படுத்தி, மண்ணுடன் இயற்கை உரத்தை கலந்து மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் முடிவடைந்து, வரும் மார்ச் மாத தொடக்கத்தில் மலர்கள் பூத்துகுலுங்குவதுடன், காய்கறி கண்காட்சிக்கு பூங்கா தயாராகி விடும் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...