வழிய வழிய பயணிகளை ஏற்றிக் கொண்டு அசுர வேகத்தில் ஓடிய தனியார் பேருந்து : ஊடகச் செய்தியால் சில மணி நேரங்களில் நடவடிக்கை எடுத்த போலீசார்

கோவை : கோவையில் சட்டவிரோதமாக அதிகளவு பயணிகளை ஏற்றிக் கொண்டு, சாலையில் அதிவேகமாக ஓடிய தனியார் பேருந்து குறித்த செய்தி ஊடகங்களில் வெளியான சில மணிநேரங்களிலேயே, வழக்குப்பதிவு செய்த போலீசாரின் நடவடிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கோவை : கோவையில் சட்டவிரோதமாக அதிகளவு பயணிகளை ஏற்றிக் கொண்டு, சாலையில் அதிவேகமாக ஓடிய தனியார் பேருந்து குறித்த செய்தி ஊடகங்களில் வெளியான சில மணிநேரங்களிலேயே, வழக்குப்பதிவு செய்த போலீசாரின் நடவடிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

கோவை அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை ஆகிய முக்கிய சாலைகளில் தனியார் பேருந்துகளும், அரசு பேருந்துகளும் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக வாகனத்தை இயக்கி வருகின்றனர். 

இதில், குறிப்பாக தனியார் பேருந்துகள் அதிவேகமாக வாகனத்தை இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகிறது.

இதில், "s29" என்ற ஒண்டிப்புதூர் - துடியலூர் வரை செல்லும் TN 66 P 3773 என்ற எண் கொண்ட தனியார் பேருந்து சாலைகளில் அதிவேகமாகப் பேருந்தை இயக்குவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்தப் பேருந்தானது, கடந்த 11-ம் தேதி மாலை ஹோப்ஸ் பகுதியிலிருந்து சிங்காநல்லூர் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. 

இது சுமார் 60 கி.மீட்டரில் இருந்து 70 கி.மீட்டர் வேகத்தில் அதிவேகமாக இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல, அதிக ஹாரன் சத்தத்தை எழுப்பியும் இந்தப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சாலையில் பயணித்த சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் அதிவேகமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்லும் இந்தப் பேருந்தில் பயணிகள் தொங்கியபடி செல்லும் காட்சிகளை பதிவு செய்து ஊடகங்களுக்கு கொடுத்துள்ளார். 

இதையடுத்து, ஊடகங்களில் செய்தி வெளியாகிய சில மணி நேரங்களில், பீளமேடு காவல்நிலையப் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், பீளமேடு அருகே உள்ள கிருஷ்ணம்மாள் கல்லூரியின் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை வழிமறித்து பிடித்தார்.

பின்னர், பேருந்து ஓட்டுநர் மீது அதிவேகமாக வாகனத்தை இயக்கியது, படியில் தொங்கியபடி பயணிகளை அழைத்துச் சென்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் இது குறித்து உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் கூறுகையில், "அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வரும் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து ஒரே பேருந்து மீண்டும், மீண்டும் விதியை மீறும் போது அதிகபட்ச தண்டனை விதிக்கப்படும்," என எச்சரிக்கை விடுத்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...