கோவை : இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தேசிய சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பு சார்பில் சிறு, குறு தொழில் நிறுவனங்களில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கோவை : இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தேசிய சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பு சார்பில் சிறு, குறு தொழில் நிறுவனங்களில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம், இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) மற்றும் தேசிய சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பு சார்பில் சிறு, குறு தொழில் நிறுவனங்களில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சி, கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில், சி.ஐ.ஐ. கோவை மண்டல நிர்வாக இயக்குநர் ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார்.
நேஷனல் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் நிறுவன நிர்வாக மேலாளர் ஜி. கண்ணன், மாவட்ட தொழில் நிறுவனங்கள் மைய நிர்வாக மேலாளர் கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம், பாரத் பெட்ரோலிய நிறுவனம், போல் இந்தியா, இந்துஸ்தான் பெட்ரோலியம், காமராஜ் போர்ட், எல்.என்.டி ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும், சுமார் 100-க்கும் மேற்பட்ட எஸ்.சி., எஸ்.டி. தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
பொது நிறுவனங்களில் எவ்வாறு பதிவு செய்து தொழில் வாய்ப்புகளைப் பெறுவது என்பது குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. இறுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் நவநீத சிவகுமார் நன்றியுரை ஆற்றினார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம், இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) மற்றும் தேசிய சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பு சார்பில் சிறு, குறு தொழில் நிறுவனங்களில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சி, கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில், சி.ஐ.ஐ. கோவை மண்டல நிர்வாக இயக்குநர் ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார்.
நேஷனல் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் நிறுவன நிர்வாக மேலாளர் ஜி. கண்ணன், மாவட்ட தொழில் நிறுவனங்கள் மைய நிர்வாக மேலாளர் கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம், பாரத் பெட்ரோலிய நிறுவனம், போல் இந்தியா, இந்துஸ்தான் பெட்ரோலியம், காமராஜ் போர்ட், எல்.என்.டி ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும், சுமார் 100-க்கும் மேற்பட்ட எஸ்.சி., எஸ்.டி. தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
பொது நிறுவனங்களில் எவ்வாறு பதிவு செய்து தொழில் வாய்ப்புகளைப் பெறுவது என்பது குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. இறுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் நவநீத சிவகுமார் நன்றியுரை ஆற்றினார்.