கோவை - பொள்ளாச்சி சாலை விரிவாக்கப் பணிகளுக்கு நடுவே மரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை

கோவை : கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கு மத்தியில், மரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொள்ளாச்சி மண்டல துணை ஆட்சியர் பி. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை : கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கு மத்தியில், மரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொள்ளாச்சி மண்டல துணை ஆட்சியர் பி. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 



கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளின் போது, சாலையோரத்தில் இருக்கும் மரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக, பொள்ளாச்சி மண்டல துணை ஆட்சியர் பி. காயத்ரி கிருஷ்ணனிடம் கேட்ட போது, சாலையோரத்தில் இருக்கும் 35 மரங்கள் அகற்றப்பட்டு, வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட இருப்பதாக கூறினார். 



இந்த ஆரம்ப பணிகள் பொள்ளாச்சி மண்டலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்தார். 

"கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளின் போது, அகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக, சுமார் 10,000 மரக்கன்றுகள் நடவு செய்ய பொள்ளாச்சி மண்டலத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. 

இன்று பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை வட்டத்தில் தலா 2,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகள் ஒவ்வொன்றும் சிறு சிறு இடைவேளைகளில் விரைந்து வளரும் வகையிலான முறையில் நடவு செய்யப்பட்டுள்ளது. 

எங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சுமார் 20 வகையிலான மரக்கன்றுகளில், 60 சதவீதம் கடினமான தன்மை கொண்ட மரங்களும், 30 சதவீதம் பழங்களைக் கொடுக்கும் மரங்களும், 10 சதவீதம் மலர் மரங்களும் உள்ளன. 

இவை பொதுப் பணித்துறை மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகளின் உதவியால் நடவு செய்யப்படுகின்றன. மேலும், 10,000 மரக்கன்றுகள் அடுத்தகட்டமாக வழங்கப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக பணியாற்றி வரும் அனைவருக்கும் நன்றி," என்றார் பொள்ளாச்சி மண்டல துணை ஆட்சியர் பி. காயத்ரி கிருஷ்ணன். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...