கோவை : மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
கோவை : மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை அரங்கநாதர் கோவில், சுமார் 1200 ஆண்டுகள் பழமையான வைணவ திருக்கோவிலாகும். இங்கு மாசிமக தேர்த்திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இவ்வாண்டிற்கான தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று தொடங்கியது.

இதையடுத்து, கொடி மரத்தின் அருகே உள்ள கருடாழ்வார் சிலைக்கு பால், திருமஞ்சனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி மேளதாளம் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வளம் வந்தது. அதன் பின் வேத விர்பனர்கள் மந்திரங்கள் முழங்க, கொடி மரத்தில் கருடாழ்வார் கொடி ஏற்பட்டது. இக்கொடியேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

மேலும், இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியினையடுத்து, தினசரி பல்வேறு சிறப்பு வைபவங்கள், அன்னவாகனம், சிம்மவாகனம், அனுமந்த வாகனம், திருக்கல்யாண உற்சவம் எனத் தொடர்ச்சியாக நடைபெறும். அரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளும் திருத்தேரோட்ட நிகழ்ச்சி வரும் 19ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

இதனிடையே, காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை அரங்கநாதர் கோவில், சுமார் 1200 ஆண்டுகள் பழமையான வைணவ திருக்கோவிலாகும். இங்கு மாசிமக தேர்த்திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இவ்வாண்டிற்கான தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று தொடங்கியது.

இதையடுத்து, கொடி மரத்தின் அருகே உள்ள கருடாழ்வார் சிலைக்கு பால், திருமஞ்சனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி மேளதாளம் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வளம் வந்தது. அதன் பின் வேத விர்பனர்கள் மந்திரங்கள் முழங்க, கொடி மரத்தில் கருடாழ்வார் கொடி ஏற்பட்டது. இக்கொடியேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

மேலும், இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியினையடுத்து, தினசரி பல்வேறு சிறப்பு வைபவங்கள், அன்னவாகனம், சிம்மவாகனம், அனுமந்த வாகனம், திருக்கல்யாண உற்சவம் எனத் தொடர்ச்சியாக நடைபெறும். அரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளும் திருத்தேரோட்ட நிகழ்ச்சி வரும் 19ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

இதனிடையே, காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.